ரஜனிகாந்துக்கு வழங்கப்பட்டுள்ள உயரிய விருது
இந்திய திரைப்படத்துறை விருதுகளில் உயரிய விருதான “தாதா சாகேப்” விருது நடிகர் ரஜனிகாந்துக்கு (Rajinikanth) வழங்கப்பட்டுள்ளது.
புதுடில்லியில் இடம்பெற்ற நிகழ்வில், இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு (M. Venkaiah Naidu) இந்த விருதை வழங்கி வைத்துள்ளார்.
சினிமாவின் தந்தையான தாதா சாகேப்பின் நினைவாக, இந்த விருது வருடந்தோறும் திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனைப் புரிந்தவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே இந்த விருது அமிதாப்பச்சன் (Amitabh Bachchan) மற்றும் சிவாஜி கணேசன் (Sivaji Ganesan) ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதில் சிவாஜி கணேசனுக்கு பின்னர் தமிழ்த் திரையுலகில் எவருக்கும் வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் இன்று விருதைப் பெற்றுக் கொண்ட நடிகர் ரஜனிகாந்த், விருதை தமது
குருவான கே.பாலசந்தருக்கு சமர்ப்பிப்பதாக தெரிவித்துள்ளார்.






அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 14 மணி நேரம் முன்

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
