மண்ணுக்குள் புதைந்த வீடு! முழு கிராமமே அழிந்த அபாயம்
கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மலாவியை பிரெட்டி புயல் பலமாக தாக்கியுள்ளது.
கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்துள்ளது. இதனால் பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
மீட்பு பணிகள்
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலாவி நாட்டை உலுக்கிய புயலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 326 ஆக உயர்ந்து உள்ளது.
தொடர்ந்து அங்கு மழை பெய்து வருவதால் மரண எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
கிராமமே அழிந்துவிட்டது
பாதைகள், பாலங்கள் சேதமடைந்துள்ளதால் போக்குவரத்து முற்றிலும் முடங்கி விட்டது. பல இடங்களில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள ஒரு மலைக்கிராமத்தில் கடுமையான மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதில் அங்கிருந்த வீடுகள் மண்ணுக்குள் புதைந்தது. இதில் சிக்கி 32 பேர் இறந்தனர். 18 பேரை காணவில்லை.
இந்த நிலச்சரிவால் அந்த கிராமமே அழிந்து விட்டது என தகவல் வெளியாகியுள்ளது.
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
ஐக்கிய அரபு அமீரகம் மீது பாய்ந்த ஈரானின் 137 ஏவுகணைகள், 209 ட்ரோன்கள்: மத்திய கிழக்கில் பதற்றம் News Lankasri
ஒரேயடியில் 48 ஈரானியத் தலைவர்கள், 9 கடற்படைக் கப்பல்கள் துவம்சம்: பெருமை பேசும் ட்ரம்ப் News Lankasri
சோழன் - நிலா சேர்ந்து வாழவில்லை.. சேரன் எடுத்து அதிர்ச்சி முடிவு.. அய்யனார் துணை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam