டிட்வா சூறாவளியின் ஆறாத வடு - தேடுதல் பணிகள் நிறுத்தம்
டிட்வா சூறாவளியால் காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் உத்தியோகபூர்வமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
சூறாவளி தாக்கி 2 மாதங்களுக்கு மேலாகிவிட்டதால், தற்போதைய நெறிமுறைகளின்படி தேடுதல் பணிகள் அவசியமற்றதாகக் கருதப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளன.
இயக்குநர் பிரதீப்
இந்த அனர்த்தத்தில் காணாமல்போன 173 பேர் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

2004 சுனாமியின் போது காணாமல் போன 5,000 பேர் இன்றும் காணாமல் போனவர்கள் பட்டியலிலேயே இருப்பது போல இவர்களும் இப்போதைக்கு உயிரிழந்தவர்களாக அறிவிக்கப்பட மாட்டார்கள் என அனர்த்த முகாமைத்துவ நிலைய இயக்குநர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
சூறாவளி
இதன்படி சூறாவளியால் உறுதிப்படுத்தப்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 650 ஆக அதிகரித்துள்ளது அண்மையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நால்வர் உயிரிழந்ததைத் தொடர்ந்து இந்த எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

கடந்த 2025 நவம்பர் 27 அன்று கரையைக் கடந்த டிட்வா சூறாவளி, கனமழை மற்றும் நிலச்சரிவுகளை ஏற்படுத்தியது.
இதனால் விவசாய நிலங்கள், நீர்ப்பாசன அமைப்புகள், மின்சாரம் மற்றும் போக்குவரத்து கட்டமைப்புகள் என நாடு முழுவதும் பாரிய சேதங்கள் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.