பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளின் போது பதிவான சைபர் தாக்குதல்கள்
நடந்து முடிந்த பாரிஸ் (Paris) ஒலிம்பிக் (Olympics) போட்டிகளின் போது 140 சைபர் தாக்குதல்கள் பதிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் கடந்த ஜூலை மாதம் 26ஆம் தேதி தொடங்கிய ஒலிம்பிக் திருவிழா, இந்த மாதம் 11ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.
இந்தப் போட்டியில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றிருந்தனர்.
தாக்குதல் முயற்சி
இந்நிலையில், போட்டிகள் தொடங்கிய தினத்திலிருந்து நிறைவடைந்த நாள் வரை 140 சைபர் தாக்குதல்கள் பதிவாகியிருந்ததாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதல்கள் முக்கியமாக அரசு நிறுவனங்கள், விளையாட்டு, போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு உட்கட்டமைப்புக்களை குறிவைத்ததாக பிரான்ஸ் நாட்டின் அரசாங்க இணைய பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆனால், இது விளையாட்டுகளில் ஈடுபட்டுள்ள எந்த தகவல் அமைப்புகளையும் பாதிக்கவில்லை எனவும் குறித்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக, போட்டி தொடங்கும் நாளன்று பிரான்ஸ் நாட்டின் தொடருந்து கடவைகள் மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக News Lankasri
நான் குட்டை உடை அணிந்த புகைப்படம் வெளியானதும் அவ்ளோ பிரச்சனை... சீரியல் நடிகை பரீனா ஆசாத் Cineulagam
அடேங்கப்பா நம்ம முத்துவா இது, ஆளே மாறிட்டாரே, என்ன செய்துள்ளார் பாருங்க... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
பலமுறை ஏமாற்றப்பட்டேன், கடவுள் நீதி வழங்குவார் - கிரிக்கெட் வீரரின் வருங்கால மனைவி பதிவு News Lankasri