பிரதமரின் இணையதளம் மீது சைபர் தாக்குதல்
பிரதமர் மகிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.mahindarajapaksa.lk என்ற இணையத்தளம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை தகவல் தொழிநுட்ப சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குள் செல்லும் போது வேறு ஒரு இணையத்திற்குள் பிரவேசிக்கும் வகையில் மாற்றப்பட்டிருந்ததாகவும் அந்த சங்கம் கூறியுள்ளது.
அந்த இணையத்தளத்தில் பிட்கொய்ன் சம்பந்தப்பட்ட விடயங்கள் உள்ளடங்கியுள்ளன.
இந்த இணையத்தளத்தின் ஊடாக வேறு இணைய பக்கங்களுக்குள் செல்ல முடியும் என்பதுடன், சைபர் தாக்குதலாளிகள், சுயமான சில மென்பொருட்களை கணனி அல்லது கையடக்க தொலைபேசிகளுக்கு பதிவிறக்கம் செய்யும் வகையில் மாற்றியுள்ளனர்.
எவ்வாறாயினும் பிரதமரின் உத்தியோகபூர்வ இணையத்தளம் பின்னர் வழமை நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.