இணைய தளங்கள் மீதான சைபர் தாக்குதல் - இலங்கை கணினி அவசர தயார்நிலை அணியின் அறிவிப்பு
ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட அரசாங்கத்துக்கு உரித்தான மேலும் பல நிறுவனங்களின் இணையத்தளங்கள் மீது எவ்வித இணைய வழி தாக்குதலும் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை கணினி அவசர தயார்நிலை அணி அறிவித்துள்ளது.
ஜனாதிபதி செயலகம், வெளிவிவகார அமைச்சு உள்ளிட்ட அரசாங்கத்தின் 6 இணையத்தளங்கள் மீது இணையவழி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்தொழில்நுட்ப சங்கம் முன்னதாக அறிவிப்பொன்றை வெளியிட்டிருந்தது.
எவ்வாறாயினும், குறித்த இணையளத்தளங்கள் மீது எந்தவொரு இணையவழி தாக்குதல்களும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் தொழிநுட்ப கோளாறே ஏற்பட்டிருந்தது என்றும் இலங்கை கணினி அவசர தயார்நிலை அணி தெரிவித்துள்ளது.
இதேவேளை போலியான தகவலை பகிர்ந்த இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கத்தின் தலைவர் ரஜீவ் யசிரு குருவிட்ட மெத்தீவை, இலங்கை காவல்துறையின் கணினிக் குற்றப்பிரிவுக்கு அழைப்பித்து விசாரணைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதலாம் இணைப்பு
ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட நாட்டின் முக்கிய நிறுவனங்களின் இணைய தளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
ஜனாதிபதி செயலகம், வெளிவிவகார அமைச்சு, மருத்துவ ஆய்வு நிறுவனம், இலங்கை அளவைத் திணைக்களம், குடும்ப சுகாதார அலுவலகம், வடமேல் மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்கள் சிலவற்றின் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அரசாங்க இணைய தளங்கள் மீது இவ்வாறான தாக்குதல்கள் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
எனினும் இந்த எச்சரிக்கையை அரசாங்கம் பொருட்படுத்தாத காரணத்தினால் இணைய தளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் தெரிவித்துள்ளது.