தீவிரம் அடையும் தமிழரசு கட்சியின் உள்ளக மோதல் - நான் சில்லறை அல்ல என்கிறார் சீவிகே!
போர் குற்றங்கள் தொடர்பாகவும் இனப்படுகொலை தொடர்பாகவும் நாங்கள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டி இருக்கிறோம் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் செம்மணி தொடர்பாக இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விமர்சித்தமை குறித்து கருத்து தெரிவித்த போதே இதனை குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், "நாம் உள்ளக விசாரணையை கேட்கவில்லை. அது மட்டும் அல்லாமல் நாங்கள் ஒரு விடயத்தை முக்கியமாக தெளிவாகச் சொல்லியுள்ளோம்.
கஜேந்திரகுமாரின் குற்றச்சாட்டு அபத்தமானது. இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் அகழ்வுகள் பற்றியே நாங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளோம்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில்,



