வாடிக்கையாளர்களுக்கு தலா 5 கிலோ அரிசி மட்டுமே விற்க முடியும்:சுற்றறிக்கை அனுப்பியுள்ள சதோச நிர்வாகம்
பல அத்தியவசிய பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு மட்டுப்படுத்தி வழங்குமாறு சதோச கிளைகளின் முகாமையாளர்களுக்கு சுற்றறிக்கை மூலம் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் இறக்குமதி செய்த ஒரு கிலோ கிராம் நாட்டு அரிசியை 110 ரூபா மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் பொன்னி சம்பா அரிசியை 130 ரூபா என்ற விலையில் வாடிக்கையாளர்களுக்கு தலா 5 கிலோ கிராம் அரிசியை மாத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோ சீனி 160 ரூபாவுக்கும் ஒரு கிலோ பருப்பு 360 ரூபாவுக்கும் சதோச கிளைகளில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில், வாடிக்கையாளர்களுக்கு ஒரு கிலோ சீனி மற்றும் 500 கிராம் மைசூர் பருப்பை வழங்குமாறு கிளை முகாமையாளர்களுக்கு சதோச நிர்வாகம் ஆலோசனை வழங்கியுள்ளது.
சதோச கிளைகளில் கோதுமை மா உட்பட பல அத்தியவசிய பொருட்கள் விற்பனைக்கு இல்லை என நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.





தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

விஜய்யின் ‘குஷி’ ரீரிலீஸ் தியேட்டர் எல்லாம் காத்து வாங்குதா.. பிரபல தியேட்டர் உரிமையாளர் ட்ரோலுக்கு பதில் Cineulagam

மனோஜை துடைப்பக்கட்டையால் ரவுண்டு கட்டி அடித்த பெண்கள், அப்படி என்ன செய்தார்.. சிறகடிக்க ஆசை கலகலப்பு புரொமோ Cineulagam
