மருத்துவத்துறை பாரிய சவாலை எதிர்நோக்கி வருகின்றது: நாகேஷ்வரன்
”கிளிநொச்சி சுகாதார வைத்திய அதிகாரி மீது தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்தமை, வைத்தியர்களுக்கான மேலதிக கொடுப்பனவு கிடைக்கப்பெறாமை மற்றும் மருந்துகளுக்கான பற்றாக்குறை என்பவற்றால் மருத்துவ துறை பல்வேறு பாதிப்புக்களை எதிர்கொள்கின்றது” என மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் நாகேஷ்வரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பொன்று இன்று(26) பகல் நடைபெற்றுள்ளது.
இந்த சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் நாகேஷ்வரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வைத்தியர்களின் அவலம்
”வைத்தியர்களுக்கு வழங்க வேண்டிய மேலதிக நேர கொடுப்பனவுகள் இதுவரை வழங்கப்படாத நிலை காணப்படுகின்றது.
அதே வேளை வைத்தியசாலைகளில் முக்கியமான மருந்துகளுக்கான பற்றாக்குறையும் காணப்படுகின்றது.

இதனால் மருத்துவத்துறை பாரிய சவாலை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்துள்ளார்.
தாக்குதல்
எரிபொருள் பெற்றுக்கொடுப்பதற்காக எடுத்த முயற்சிகளின் போது பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதுடன் இதற்கு சரியான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்”என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சாப்பிட்ட KFC எலும்பு துண்டுகளை தானமாக வழங்கிய கொடுஞ்செயல்: இன்ஸ்டா பிரபலத்திற்கு ரூ. 9.2 லட்சம் அபராதம் News Lankasri
இந்தியா வீரர்களின் பேட்டில் பூசப்பட்டுள்ள பொருளே அதிரடிக்கு காரணம் - இலங்கை வீரர் குற்றச்சாட்டு News Lankasri
மனைவியை பிரிந்ததில் சந்தோஷம் தான்... இரண்டாம் திருமணம் குறித்து நடிகர் பார்த்தீபன் ஓபன் டாக்! Manithan
லண்டன் பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல்: 2 மாணவர்கள் நிலை கவலைக்கிடம்: 13 வயது சிறுவன் கைது News Lankasri