தற்போதைய ஜனாதிபதியும் இனப்படுகொலையாளியே: அருட்தந்தை மா.சத்திவேல்

Tamils Anura Kumara Dissanayaka Sri Lanka Government Of Sri Lanka
By Shan Jul 21, 2025 03:24 PM GMT
Report

தற்போதைய ஜனாதிபதியும் இனப்படுகொலையாளியே. அவரின் கட்சியும் இனப்படுகொலை கட்சியாக செயல்பட்டதே வரலாறு என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று (21.07.2025) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சிங்கள, பௌத்த பேரினவாத ஆட்சியாளர் தமிழ் இனப்படுகொலைக்கான தருணம் பார்த்திருந்து அதனை வழிநடத்த அரசியல் வாதிகளை நேரடியாக களத்தில் இறக்கியதோடு பௌத்த துறவிகளையும், குண்டர்களையும், அடிமட்ட சிங்கள மக்களையும் ஏவி தமிழர்களின் அவலக் குரலும் அவர்களின் சாம்பலிலும் மகிழ்ந்த கருப்பு ஜூலை 83 ஐ தொடர்ந்து 42 ஆண்டுகளாக பல்வேறு வடிவங்களில் இனப்படுகொலை நிகழ்த்திக் கொண்டிருக்கையிலும்; "இனப்படுகொலை நிகழவில்லை"என கூறுவதோடு "சமூக புதைகுழிகளை தோண்ட தேவை இல்லை" எனக் கூறுவதும் இனப்படுகொலையில் நீட்சியின் கோரம் மட்டுமல்ல நீதி, நியாயம், உண்மை, பௌத்த தர்மம் என்பவற்றை சமூக புதைகுழிக்குள் தள்ளியதன் வெளிப்பாடு எனவும் கூறலாம்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் கைது

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் கைது

இனப்படுகொலை

ஜெ.ஆர். ஜெயவர்த்தன தலைமையில் 6/5 பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் அறிமுகப்படுத்திய திறந்த பொருளாதாரக் கொள்கையால் பாதிக்கப்பட்ட தொழிலாளர் வர்க்கம் அரசாங்கத்துக்கு எதிராக 1980 இல் நடத்திய வேலை நிறுத்த போராட்டத்தினை அராஜகமாக அடக்கி ஒடுக்கி அது மீண்டும் எழுச்சி கொள்ளாதிருக்க இன அழிப்பு நாடகத்தினை 1983 ஜூலையில் நிறைவேற்றியதோடு தமிழ் இளைஞர் கையில் ஆயுதத்தையும் திணித்து சிங்கள தொழிலாளர் வர்க்கத்தையும் கிராமிய சிங்கள இளைஞர்களையும் தமிழர்களுக்கு எதிராகத் திருப்பி நாட்டை அழிவிற்குள் தள்ளினர்.

தற்போதைய ஜனாதிபதியும் இனப்படுகொலையாளியே: அருட்தந்தை மா.சத்திவேல் | Current President Is Also A Genocide Murderer

வடக்கு ,கிழக்கு தமிழர் தேசத்திற்கு வெளியே தமிழர்களின் பொருளாதாரத்தை அழித்து தீட்டு கொளுத்தியவர்கள் பச்சிளம் பாலகர்கள், வாலிபர்கள் வயது முதிர்ந்தோர் கண்ணில் கண்டோரை தாக்கியும் 3000 க்கும் அதிகமானோரை வெட்டியும், குத்தியும் தீக்குள் தள்ளியும் இனப்படுகொலை செய்து வெறியாட்டம் நடத்தினர்.

இதற்கு அரசு வளங்களும் படையினரும் பாவிக்கப்பட்டமை அனைவரும் அறிந்ததே. இதனைத் தொடர்ந்து தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு எங்கும் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக இதுவே நடந்தது . இனப்படுகொலையின் உச்சம் 2009ல் முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த போதும் அதில் திருப்தி கொள்ளாத சிங்களப் பேரினவாதம் தொடர்ந்தும் பல்வேறு வடிவங்களில் இன அழிப்பு இனப்படுகொலை என்பவற்றை தொடர்ந்து கொண்டே இருப்பதை நாம் அவதானிக்கின்றோம்.

மாகாணசபைத் தேர்தல் அடுத்த வருடம்! வெளியான தகவல்

மாகாணசபைத் தேர்தல் அடுத்த வருடம்! வெளியான தகவல்

கோரிக்கை

ஒரு தடவை புத்த பெருமான் தம்மிடம் வந்த ஒரு தாயிடம் "மரணம் நிகழாத வீட்டில் இருந்து ஒருபிடி எள் கொண்டு வாருங்கள்" என்றார். அது போன்று சர்வதேச சமூகமும் ஐ.நா மனித உரிமை ஆணையாளரிமும் கேட்கின்றோம் இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் கூறுங்கள்"தமிழர் தாயகத்தில் இனப்படுகொலை நிகழாத கிராமத்திலிருந்தும், அதனால் பாதிக்கப்படாத குடும்பங்களில் இருந்தும் , கண்ணீர் சிந்தாத மக்களிடமிருந்தும் ஒரு பிடி நெல் கொண்டு வருமாறு கூறுங்கள். அவர்களால் அதனை செய்ய முடியாது காரணம் தற்போதைய ஜனாதிபதியும் இனப்படு கொலையாளியே. அவரின் கட்சியும் இனப்படுகொலை கட்சியாக செயல்பட்டதே வரலாறு.

தற்போதைய ஜனாதிபதியும் இனப்படுகொலையாளியே: அருட்தந்தை மா.சத்திவேல் | Current President Is Also A Genocide Murderer

தமிழர்களைப் பொறுத்தவரை நாட்டில்1983 ஆம் ஆண்டு ஜூலை மட்டுமல்ல கறுப்பு. இந்த நாட்டின் சுதந்திரம், அரசியல் யாப்பு,பயங்கரவா தடை சட்டம், அரசியல் யாப்பின் 13 ம் திருத்தம் எனபவற்றோடு ஆட்சியில் அமரும் அத்தனை அரசாங்கங்களும் பேரினவாத கடும் கருப்பே. இவர்களிடமிருந்து தமிழர்களுக்கு எந்த நீதியும் கிட்டப் போவதில்லை.

ஆதலால் 1983 கறுப்பு ஜீலையின் 42 ஆம் நினைவாண்டில் சர்வதேச வல்லரசுகளே, ஐ.நா மன்றமே,ஐ.நா மனித உரிமை பேரவையே உங்கள் அரசியலுக்காக குற்றவாளிகள் கூண்டில் இருக்கும் இலங்கை அரசாங்கம் தமிழர்களுக்கான நீதியை கையளிக்காது; சுதந்திர தேசமாய் கடந்த 75 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கை அரசு இனப்படுகொலை புரிந்துள்ளது என்பதை ஏற்றுக் கொண்டு இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துவதோடு தமிழர்களுக்கான அரசியல் நீதிக்கு வழி விடுமாறும் கோரிக்கை விடுக்கின்றோம் என்றுள்ளது.

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை ரத்து செய்யப்படுமா! பிரதமர் விளக்கம்

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை ரத்து செய்யப்படுமா! பிரதமர் விளக்கம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, சிலாபம், கொழும்பு, St. Gallen, Switzerland

07 May, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Drancy, France

08 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Aubervilliers, France

04 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US