புகையிரத திணைக்களத்துக்குச் சொந்தமான 14ஆயிரம் ஏக்கரில் பயிர்ச்செய்கை
புகையிரத திணைக்களத்துக்கு சொந்தமான 14 ஆயிரம் ஏக்கர் காணியில் பயிர்ச்செய்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதில் பெருமளவான காணிகள் அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் காணப்படுகின்றன.
குறித்த காணிகளை ஒருவருட குத்தகை அடிப்படையில் விவசாயம் செய்யக் கூடிய நபர்கள் மற்றும் புகையிரத திணைக்கள காணிகளுக்கு அருகாமையில் வசிப்போர் ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளது.
புகையிரத திணைக்களம் மற்றும் கமத்தொழில் அமைச்சின் கூட்டு முயற்சி
புகையிரத திணைக்களம் மற்றும் கமத்தொழில் அமைச்சு என்பன கூட்டாக இணைந்து இந்த செயற்திட்டத்தை மேற்கொள்ளவுள்ளன.
நீண்ட காலப் பயிர்ச் செய்கை தவிர்ந்த உணவுப் பயிர்ச்செய்கைகளை மட்டும் பயிரிடும் வகையில் இந்தக் காணிகள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.