ஜனாதிபதி அநுரவிடம் ஆசிரியர் சங்கம் முன்வைத்துள்ள கோரிக்கை
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடுகளை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayaka) தலைமையிலான அரசாங்கம் நிவர்த்தி செய்ய வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் (CTU) பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்ட கோரிக்கையை முன்வைத்த அவர்,
"முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) ஆட்சியில் இருந்து பேசப்பட்டு வரும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடுகளை அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் நிவர்த்தி செய்ய வேண்டும்.
நாட்டின் நிலை
எதிர்கால பொது மற்றும் உள்ளூராட்சி தேர்தலை திட்டமிடும் போது, நாட்டை ஸ்திரப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடுகளுக்கும் தீர்வுகளை வழங்குமாறு கோரிக்கை விடுக்கின்றோம்.
அரசாங்க ஊழியர்கள், முடியாத அழுத்தங்களிலும் பிரச்சினைகளிலும் உள்ளனர், அதேவேளை, பலர் தங்கள் அஞ்சல் வாக்குகள் மற்றும் தீவிர ஈடுபாட்டின் மூலம் தேசிய மக்கள் சக்தியை (NPP) ஆதரித்தனர். எனவே, அரசாங்கம் அவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
நாட்டில் மக்கள் ஏற்கனவே போராட்டம் நடத்தி வருகின்றனர், இந்த அரசாங்கம் அவர்களின் வாக்குகளால் ஆட்சிக்கு வந்துள்ளது.
ஆகையால், ஆசிரியர் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடுகளை நியாயமான காலத்திற்குள் தீர்க்க வேண்டும், அவ்வாறு இல்லையெனில் நாங்கள், எங்கள் சொந்த நடவடிக்கையை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்“ என வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானப்படை போர் பயிற்சி: களத்தில் Rafale, Sukhoi-30... News Lankasri

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri
