உலகளவில் கச்சா எண்ணெய் விலை திடீர் உயர்வு!
ஈராக்கில் இருந்து துருக்கிக்கு எரிபொருள் கொண்டு செல்லும் குழாயில் ஏற்பட்ட கோளாறு மற்றும் உலகில் நிலவும் புவிசார் அரசியல் பிரச்சனைகள் காரணமாக கச்சா எண்ணெய் விநியோகம் தடைப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதனால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து நான்காவது முறையாக இன்று (19) உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 1.2 சதவீதம் உயர்ந்து 88.38 டொலராக அதிகரித்துள்ளது. 2014 ஒக்டோபர் 13ம் திகதிக்கு பின்னர் ஏற்பட்ட மிக கூடிய விலையுயர்வு இதுவாகும்.
West Texas Intermediat கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 1.03 டொலர் அதிகரித்து அதன் விலை 86.46 டொலராக பதிவாகியுள்ளது. 2014 ஒக்டோபர் 9ம் திகதிக்கு பின்னர் ஏற்பட்ட மிகக் கூடிய விலை உயர்வு இதுவாகும்.
ஈராக்கின் கிர்குக்கில் இருந்து துருக்கியின் சீன் வரையிலான குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டுள்ளது. எனினும் வெடிப்பிற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
உலகின் இரண்டாவது மற்றும் மூன்றாவது பெரிய எண்ணெய் உற்பத்தியாளர்களான ரஷ்யா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை உலகளாவிய அரசியல் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.