கிழக்கில் செயற்பட்ட முஸ்லிம் படையணி - அழிக்கப்பட்ட சாட்சிகள்!
இலங்கையில் பல உயிர்களை காவுகொண்ட ஈஸ்டர் குண்டுதாக்குதல்கள், அந்த தாக்குதல் நடைபெறுவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்தே திட்டமிடப்பட்டதாகவும், அதற்கான சாட்சிகள் சிறிலங்கா புலனாய்வு பிரிவினரால் மறைக்கப்பட்டதாக நாடாளுமன்றில் தெரிவிக்கப்பட்டது.
இந்த விடயங்கள் குறித்தான தேடுதல் பயணத்தின் போது பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்தன. ஈஸ்டர் குண்டுதாக்குதல்கள் தொடர்பான விடயங்கள் ஏற்கனவே சிறிலங்கா புலனாய்வு பிரிவினருக்கு தெரிந்திருக்கின்றதா?
இந்த விடயங்கள் வெளிவருவதை புலனாய்வு பிரிவின் ஒரு பகுதியினர் தடுத்திருந்தார்கள் என்று கூறப்படுவது உண்மையா? என தேடிய போது பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்தன.
ஈஸ்டர் குண்டுதாக்குதல்கள் பற்றிய விபரம் தெரிந்த பலர் கொல்லப்பட்டதும் தெரியவந்தது.
சாட்சியங்களை அழித்த நடவடிக்கையில் சிறிலங்கா புலனாய்வு பிரிவின் சிலர் நேரடியாக ஈடுப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி..
ஆறு மணிநேரமாக மீண்டும் மீண்டும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை! கடலின் நடுவில் அதிரடி காட்டிய அமெரிக்கா - வெளியான காணொளி