எரிபொருள் விநியோகத்திற்கு தடையான காகம் - செய்திகளின் தொகுப்பு
மக்கள் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முண்டியடிக்கும் நிலையில் அதனைக்கூட விரைவில் பெற்றுக்கொள்ள முடியாமல் அரை மணிநேரம் தடுத்துள்ளது காகம்.
ஐந்து நாட்களுக்குப் பின்னர் இன்று (18) பிற்பகல் பண்டாரகம கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு ஒரு தொகை பெட்ரோல் கிடைத்துள்ளது.
எரிபொருளைப் பெறுவதற்காக எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் வரிசையில் நின்ற பெருமளவான மக்களுக்கு எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்ட போது அப்பகுதியில் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய காலை செய்திகளின் தொகுப்பு,