எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட 12 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது
எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட. 12 இந்திய (India) கடற்றொழிலாளர்கள் இன்று (12) அதிகாலை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 12 கடற்றொழிலாளர்களும் மயிலிட்டி கடற்கரை முகாமில் தடுத்து வைத்து விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் பருத்தித்துறை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக நீரியல் வளத்துறை மற்றும் கடல் தொழில் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாம்பன் பாலம் முற்றுகை
இதேவேளை கைது செய்யப்பட்ட 12 இந்திய கடற்றொழிலாளர்களையும் விடுவிக்க கோரி இந்தியாவின் பாம்பன் பாலத்தை முற்றுகையிட்டு இந்திய கடற்றொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தை காலையிலிருந்து முன்னெடுத்து வருகின்றனர்.
இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டிய கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அனைத்து கடற்றொழிலாளர்களும் விடுதலை செய்யப்படும்வரை தமது போராட்டம் தொடரும் என்றும் இந்திய கடற்றொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மகாநதி சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட் இயக்கும் புதிய தொடர்... கமிட்டான சூப்பர் புதிய ஜோடி, யார் பாருங்க Cineulagam

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்... நடிப்பவர்கள் யார் யார் பாருங்க Cineulagam

கடைசி டெஸ்டில் ஏஞ்சலோ மேத்யூஸ்! நீ உன் தேசத்திற்கு உண்மையான சேவகன் - ரோஹித் ஷர்மா பிரியாவிடை News Lankasri
