எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட 12 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது
எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட. 12 இந்திய (India) கடற்றொழிலாளர்கள் இன்று (12) அதிகாலை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 12 கடற்றொழிலாளர்களும் மயிலிட்டி கடற்கரை முகாமில் தடுத்து வைத்து விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் பருத்தித்துறை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக நீரியல் வளத்துறை மற்றும் கடல் தொழில் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாம்பன் பாலம் முற்றுகை
இதேவேளை கைது செய்யப்பட்ட 12 இந்திய கடற்றொழிலாளர்களையும் விடுவிக்க கோரி இந்தியாவின் பாம்பன் பாலத்தை முற்றுகையிட்டு இந்திய கடற்றொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தை காலையிலிருந்து முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டிய கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அனைத்து கடற்றொழிலாளர்களும் விடுதலை செய்யப்படும்வரை தமது போராட்டம் தொடரும் என்றும் இந்திய கடற்றொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரிஷப ராசியில் உதயமாகும் புதன் - சுக்கிரன் : இன்று முதல் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி! Manithan
படப்பிடிப்பில் ஏற்பட்ட மூச்சுத்திணறல்.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சின்ன மருமகள் சீரியல் நடிகர் நவீன் Cineulagam
எலான் மஸ்க்கிற்கு சீனா போட்ட ஸ்கெட்ச்: ஹனிடிராப்பில் தலைவர்களை சிக்க வைக்க சீனா திட்டம்? News Lankasri