முதலை தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி
திருகோணமலை - நிலாவளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மீன்பிடிக்க சென்ற கடற்தொழிலாளர் ஒருவர் முதலை தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நிலாவெளி, பெரியகுளம் குளத்திற்கு நேற்று மீன்பிடிக்கச் சென்ற கடற்தொழிலாளர் ஒருவரை முதலை பிடித்துள்ளது. இதன்போது காயமடைந்த கடற்தொழிலாளர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இவ்வாறு முதலை கடிக்கு உள்ளானவர் நிலாவெளி பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 49 வயதுடையவர் எனவும் தெரியவருகின்றது.