நாடாளுமன்றத்திற்கு பொருந்தாத வார்த்தைப் பிரயோகங்கள் - சபையில் கடும் அமளிதுமளி
நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் நடந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினருக்கும் இடையில் ஏற்பட்ட நீண்ட வாக்குவாதம் காரணமாக சபையில் இன்று பெரும் அமளி ஏற்பட்டது.
இதன் போது ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் சபைக்கு பொருந்தாத வார்த்தைகளை பயன்படுத்தினர்.
நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார நேற்று சபாநாயகரிடம் முறைப்பாடு ஒன்றை செய்ய சென்ற போது, ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் உள்ளிட்ட ஆளும் கட்சியினர், அவரை அச்சுறுத்தியதாக எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
அப்போது கருத்து வெளியிட்ட சபை முதல்வரான அமைச்சர் தினேஷ் குணவர்தன, மனுஷ நாணயக்கார, சபாநாயகருக்கு அருகில் சென்று அச்சுறுத்தியதை கண்டிப்பதாக கூறினார்.
சபாநாயகரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கடமைப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதன் போதே ஆளும் கட்சியினருக்கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையில் சூடான வாக்குவாதங்கள் ஏற்பட்டன.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri