நாடாளுமன்றத்திற்கு பொருந்தாத வார்த்தைப் பிரயோகங்கள் - சபையில் கடும் அமளிதுமளி
நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் நடந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினருக்கும் இடையில் ஏற்பட்ட நீண்ட வாக்குவாதம் காரணமாக சபையில் இன்று பெரும் அமளி ஏற்பட்டது.
இதன் போது ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் சபைக்கு பொருந்தாத வார்த்தைகளை பயன்படுத்தினர்.
நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார நேற்று சபாநாயகரிடம் முறைப்பாடு ஒன்றை செய்ய சென்ற போது, ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் உள்ளிட்ட ஆளும் கட்சியினர், அவரை அச்சுறுத்தியதாக எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
அப்போது கருத்து வெளியிட்ட சபை முதல்வரான அமைச்சர் தினேஷ் குணவர்தன, மனுஷ நாணயக்கார, சபாநாயகருக்கு அருகில் சென்று அச்சுறுத்தியதை கண்டிப்பதாக கூறினார்.
சபாநாயகரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கடமைப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதன் போதே ஆளும் கட்சியினருக்கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையில் சூடான வாக்குவாதங்கள் ஏற்பட்டன.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 9 மணி நேரம் முன்
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri