ரணில் தொடர்பில் எழுந்துள்ள சந்தேகம்! சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு

Ranil Wickremesinghe Sri Lanka Economic Crisis Sri Lanka Economy of Sri Lanka
By Sivaa Mayuri Jul 27, 2022 03:32 AM GMT
Sivaa Mayuri

Sivaa Mayuri

in இலங்கை
Report

ரணில் விக்ரமசிங்க தனது வெற்றிக்காக ராஜபக்ச சார்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை நம்பியிருப்பதாலும், ராஜபக்சர்களுடன் இணைந்து செயற்பட்டதற்காக எதிர்ப்பாளர்களால் கண்டனம் செய்யப்பட்டதாலும், புதிய ஜனாதிபதி ஜனநாயகத்தின் முகவராக இருப்பாரா என்ற சந்தேகம் நீடித்து வருவதாக சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு தெரிவித்துள்ளது.

உறுதிப்படுத்தப்படும் சந்தேகங்கள்

கொழும்பின் பிரதான எதிர்ப்பு முகாமை வன்முறையில் அகற்றுவதற்கு இராணுவம் மற்றும் பொலிஸாரை விக்ரமசிங்க பயன்படுத்தியமை மற்றும் பல ராஜபக்ச விசுவாசிகளை அமைச்சரவையில் அவர் நியமித்தமை இந்த சந்தேகங்களை உறுதிப்படுத்தியுள்ளது, பதற்றங்களை எழுப்பியுள்ளது.

அரசியல் சீர்திருத்தங்கள் மற்றும் பொறுப்புக்கூறல் பற்றிய நம்பிக்கையை முறியடித்துள்ளதாகவும் அந்த குழு குறிப்பிட்டுள்ளது.

ரணில் வழிநடத்தும் ராஜபக்ச அரசாங்கத்தை விரட்ட விரிவான அமைப்பு: சம்பிக்க ரணவக்க 

சர்வதேச நெருக்கடிகளுக்கான குழுவின் சிரேஷ்ட ஆலோசகர் அலன் கீனன், இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

எரிபொருள், உணவு மற்றும் மருந்துகளை வாங்குவதற்கும், முழுமையான பொருளாதார வீழ்ச்சியைத் தடுப்பதற்கும் போதுமான ஆதரவை இலங்கை அதிகாரிகள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

ரணில் தொடர்பில் எழுந்துள்ள சந்தேகம்! சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு | Crisis Group Press Release

2023ஆம் ஆண்டின் ஆரம்பம் வரை சர்வதேச நாணய நிதியத்தின் நிவாரணம் எதுவும் எதிர்பார்க்கப்படாத நிலையில், எரிபொருள், உணவு மற்றும் மருந்துகளை வாங்குவதற்கும், முழுமையான பொருளாதார வீழ்ச்சியைத் தடுப்பதற்கும் இந்தியா, ஜப்பான், சீனா மற்றும் மேற்கத்திய நாடுகளின் ஆதரவை இலங்கை அதிகாரிகள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் - ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் வாகனமான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) ஆதரவுடன் - பொதுமக்களின் ஆதரவைப் பெறுவதற்குத் தேவையான நம்பகத்தன்மையை கொண்டிருக்கவில்லை.

ரணில் எடுத்த முடிவு

எதிர்ப்பாளர்களின் பிரதான முகாம் மீது தாக்குதல் நடத்த விக்ரமசிங்க எடுத்த முடிவு, எதிர்கால எதிர்ப்புக்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கையாகவும், ஜூலை 9 அன்று விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்தில் தீவைக்கப்பட்டதற்கு வெளிப்படையான பழிவாங்கலாகவும் பலரால் பார்க்கப்படுகிறது.

ரணில் தொடர்பில் எழுந்துள்ள சந்தேகம்! சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு | Crisis Group Press Release

இலங்கையின் நீண்டகால அரசியல் மற்றும் பொருளாதாரச் சீர்குலைவுகளில் இருந்து நாட்டுக்கு உதவுவதில் விக்ரமசிங்க தீவிரமானவராக இருந்தால், அவர் தனது மோதல் அணுகுமுறையிலிருந்து பின்வாங்குவது புத்திசாலித்தனமாக இருக்கும்.

துரதிஷ்டவசமாக, விக்ரமசிங்க அத்தகைய நடவடிக்கைகளை எடுக்க வாய்ப்பில்லை, ஏனெனில் அவரது அரசாங்கம் தேர்தலைத் தவிர்க்க ஆர்வமாக உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களையே சார்ந்துள்ளது என்று அலன் கீனன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை ஜனநாயக சீர்திருத்தத்திற்கான இயக்கத்தை பராமரித்தல் மற்றும் ஆழப்படுத்துதல் ஆகியவற்றின் முக்கிய வேலை, போராட்டக்காரர்களை சார்ந்துள்ளது.

இந்த நிலையில் எதிர்ப்பு இயக்கமானது உடல்ரீதியான மோதல்கள் மற்றும் பொதுக் கட்டடங்களை ஆக்கிரமிப்பு போன்ற உத்திகளுக்கு அப்பால் செல்ல வேண்டும்.

போராட்டம், கற்பனை செய்ததை விட ஏற்கனவே அதிகம் சாதித்துள்ளது. அது வெல்ல முடியாதது என்று பலர் எண்ணியிருந்த பலம் வாய்ந்த ஒரு அரசியல் வம்சத்தை வீழ்த்தியது.

ரணில் தொடர்பில் எழுந்துள்ள சந்தேகம்! சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு | Crisis Group Press Release

அத்துடன் போராட்டம், அரசியல் பேசுவதற்கும் செய்வதற்கும் இலங்கையில் ஒரு தீவிரமான புதிய இடத்தைத் திறந்துள்ளது.

எனவே இலங்கையின் பல நெருக்கடிகளின் சமீபத்திய கட்டத்தை எதிர்கொள்ள, எதிர்ப்பு இயக்கம் தன்னைத் தொடர்ந்து புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

இந்த அணுகுமுறையை முற்றிலுமாக கைவிடாமல், புதிய அரசியல் கட்சியை அமைப்பது குறித்த அதன் விவாதங்களை இயக்கம் தொடர்வது நல்லது.

அத்தகைய கட்சியானது உள் ஜனநாயகத்தை உறுதி செய்வதற்கான தெளிவான நடைமுறைகளைச் சுற்றி ஒழுங்கமைக்கப்பட வேண்டும் மற்றும் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் தெளிவான அரசியல் கோரிக்கைகளை முன்வைப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் ஆர்வலர்கள் தலைமையில் நீண்டகாலமாக இயங்கி வரும் எதிர்ப்பு இயக்கங்களுடன் மிக ஆழமான தொடர்புகளை உருவாக்கவும், ஆற்றலைப் பெறவும், போராட்டக்காரர்கள் செயல்பட வேண்டும்.

ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து பணியாற்ற தயார்: நரேந்திர மோடி 

அவ்வாறு செய்வதற்கு சிங்கள மற்றும் பௌத்த தேசியவாதத்தின் நச்சுப் பாரம்பரியத்தை மாற்றுவது அவசியமாகும், இந்த தேசியவாத நச்சு பாரம்பரியமே, சித்தாந்த மையத்தை உருவாக்கி, பல தலைமுறைகளாக வன்முறை மற்றும் ஊழல் அரசியல்வாதிகளுக்கு மறைப்பை வழங்கி வந்துள்ளது.

எனவே நாடு முழுவதிலும் உள்ள குடிமக்களால் அந்த மரபு கடுமையாக சவாலுக்கு உட்படுத்தப்பட்டால் மட்டுமே, ஊழல், பொருளாதார முறைகேடு, சர்வாதிகாரம், இராணுவமயமாக்கல் மற்றும் அரச அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தல் போன்ற நீண்டகால ஜனநாயக விரோத செயல்களில் இருந்து தப்பிக்க இலங்கைக்கு உண்மையான வாய்ப்பு கிடைக்கும் என்று சர்வதேச நெருக்கடிகளுக்கான குழுவின் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், பரிஸ், France

30 Apr, 2024
மரண அறிவித்தல்

இளவாலை, புத்தளம்

02 May, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Scarborough, Canada

28 Apr, 2024
மரண அறிவித்தல்

இளவாலை, அச்சுவேலி, Mississauga, Canada

27 Apr, 2024
மரண அறிவித்தல்

மண்டைதீவு, பேர்லின், Germany, Markham, Canada

28 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, Markham, Canada

03 May, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Ipswich, United Kingdom

27 Apr, 2024
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, பிரான்ஸ், France, Commune de Monaco, Monaco, London, United Kingdom

25 Apr, 2024
மரண அறிவித்தல்

மன்னார், யாழ்ப்பாணம், London, United Kingdom

14 Apr, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, Montreuil, France

27 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, வல்வெட்டி, அல்வாய், தெஹிவளை

01 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுப்பிட்டி, Villemomble, France

03 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Thirunelvely

06 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Aachen, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு

02 May, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
மரண அறிவித்தல்

மட்டுவில், சாவகச்சேரி, Mississauga, Canada

30 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்லுவம், மல்லாவி, Pickering, Canada

02 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை, கொழும்பு, யாழ்ப்பாணம், Montreal, Canada

05 Apr, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், உடுவில்

03 May, 2013
14ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, சொலோதென், Switzerland

03 May, 2010
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Atchuvely, வவுனியா, Montreal, Canada

01 May, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Drancy, France

29 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

19 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

நாவற்குழி, கோயிலாக்கண்டி, Paris, France

29 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, Chelles, France

12 May, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbrücken, Germany, London, United Kingdom

01 May, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்புத்துறை மேற்கு

28 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி 1ம் வட்டாரம், சிலாபம்

30 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, Surrey, United Kingdom

24 Apr, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு, வட்டக்கச்சி, Ottawa, Canada

25 Apr, 2024
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US