ரணில் தொடர்பில் எழுந்துள்ள சந்தேகம்! சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு

Ranil Wickremesinghe Sri Lanka Economic Crisis Sri Lanka Economy of Sri Lanka
By Sivaa Mayuri Jul 27, 2022 03:32 AM GMT
Sivaa Mayuri

Sivaa Mayuri

in இலங்கை
Report

ரணில் விக்ரமசிங்க தனது வெற்றிக்காக ராஜபக்ச சார்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை நம்பியிருப்பதாலும், ராஜபக்சர்களுடன் இணைந்து செயற்பட்டதற்காக எதிர்ப்பாளர்களால் கண்டனம் செய்யப்பட்டதாலும், புதிய ஜனாதிபதி ஜனநாயகத்தின் முகவராக இருப்பாரா என்ற சந்தேகம் நீடித்து வருவதாக சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு தெரிவித்துள்ளது.

உறுதிப்படுத்தப்படும் சந்தேகங்கள்

கொழும்பின் பிரதான எதிர்ப்பு முகாமை வன்முறையில் அகற்றுவதற்கு இராணுவம் மற்றும் பொலிஸாரை விக்ரமசிங்க பயன்படுத்தியமை மற்றும் பல ராஜபக்ச விசுவாசிகளை அமைச்சரவையில் அவர் நியமித்தமை இந்த சந்தேகங்களை உறுதிப்படுத்தியுள்ளது, பதற்றங்களை எழுப்பியுள்ளது.

அரசியல் சீர்திருத்தங்கள் மற்றும் பொறுப்புக்கூறல் பற்றிய நம்பிக்கையை முறியடித்துள்ளதாகவும் அந்த குழு குறிப்பிட்டுள்ளது.

ரணில் வழிநடத்தும் ராஜபக்ச அரசாங்கத்தை விரட்ட விரிவான அமைப்பு: சம்பிக்க ரணவக்க 

சர்வதேச நெருக்கடிகளுக்கான குழுவின் சிரேஷ்ட ஆலோசகர் அலன் கீனன், இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

எரிபொருள், உணவு மற்றும் மருந்துகளை வாங்குவதற்கும், முழுமையான பொருளாதார வீழ்ச்சியைத் தடுப்பதற்கும் போதுமான ஆதரவை இலங்கை அதிகாரிகள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

ரணில் தொடர்பில் எழுந்துள்ள சந்தேகம்! சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு | Crisis Group Press Release

2023ஆம் ஆண்டின் ஆரம்பம் வரை சர்வதேச நாணய நிதியத்தின் நிவாரணம் எதுவும் எதிர்பார்க்கப்படாத நிலையில், எரிபொருள், உணவு மற்றும் மருந்துகளை வாங்குவதற்கும், முழுமையான பொருளாதார வீழ்ச்சியைத் தடுப்பதற்கும் இந்தியா, ஜப்பான், சீனா மற்றும் மேற்கத்திய நாடுகளின் ஆதரவை இலங்கை அதிகாரிகள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் - ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் வாகனமான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) ஆதரவுடன் - பொதுமக்களின் ஆதரவைப் பெறுவதற்குத் தேவையான நம்பகத்தன்மையை கொண்டிருக்கவில்லை.

ரணில் எடுத்த முடிவு

எதிர்ப்பாளர்களின் பிரதான முகாம் மீது தாக்குதல் நடத்த விக்ரமசிங்க எடுத்த முடிவு, எதிர்கால எதிர்ப்புக்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கையாகவும், ஜூலை 9 அன்று விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்தில் தீவைக்கப்பட்டதற்கு வெளிப்படையான பழிவாங்கலாகவும் பலரால் பார்க்கப்படுகிறது.

ரணில் தொடர்பில் எழுந்துள்ள சந்தேகம்! சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு | Crisis Group Press Release

இலங்கையின் நீண்டகால அரசியல் மற்றும் பொருளாதாரச் சீர்குலைவுகளில் இருந்து நாட்டுக்கு உதவுவதில் விக்ரமசிங்க தீவிரமானவராக இருந்தால், அவர் தனது மோதல் அணுகுமுறையிலிருந்து பின்வாங்குவது புத்திசாலித்தனமாக இருக்கும்.

துரதிஷ்டவசமாக, விக்ரமசிங்க அத்தகைய நடவடிக்கைகளை எடுக்க வாய்ப்பில்லை, ஏனெனில் அவரது அரசாங்கம் தேர்தலைத் தவிர்க்க ஆர்வமாக உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களையே சார்ந்துள்ளது என்று அலன் கீனன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை ஜனநாயக சீர்திருத்தத்திற்கான இயக்கத்தை பராமரித்தல் மற்றும் ஆழப்படுத்துதல் ஆகியவற்றின் முக்கிய வேலை, போராட்டக்காரர்களை சார்ந்துள்ளது.

இந்த நிலையில் எதிர்ப்பு இயக்கமானது உடல்ரீதியான மோதல்கள் மற்றும் பொதுக் கட்டடங்களை ஆக்கிரமிப்பு போன்ற உத்திகளுக்கு அப்பால் செல்ல வேண்டும்.

போராட்டம், கற்பனை செய்ததை விட ஏற்கனவே அதிகம் சாதித்துள்ளது. அது வெல்ல முடியாதது என்று பலர் எண்ணியிருந்த பலம் வாய்ந்த ஒரு அரசியல் வம்சத்தை வீழ்த்தியது.

ரணில் தொடர்பில் எழுந்துள்ள சந்தேகம்! சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு | Crisis Group Press Release

அத்துடன் போராட்டம், அரசியல் பேசுவதற்கும் செய்வதற்கும் இலங்கையில் ஒரு தீவிரமான புதிய இடத்தைத் திறந்துள்ளது.

எனவே இலங்கையின் பல நெருக்கடிகளின் சமீபத்திய கட்டத்தை எதிர்கொள்ள, எதிர்ப்பு இயக்கம் தன்னைத் தொடர்ந்து புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

இந்த அணுகுமுறையை முற்றிலுமாக கைவிடாமல், புதிய அரசியல் கட்சியை அமைப்பது குறித்த அதன் விவாதங்களை இயக்கம் தொடர்வது நல்லது.

அத்தகைய கட்சியானது உள் ஜனநாயகத்தை உறுதி செய்வதற்கான தெளிவான நடைமுறைகளைச் சுற்றி ஒழுங்கமைக்கப்பட வேண்டும் மற்றும் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் தெளிவான அரசியல் கோரிக்கைகளை முன்வைப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் ஆர்வலர்கள் தலைமையில் நீண்டகாலமாக இயங்கி வரும் எதிர்ப்பு இயக்கங்களுடன் மிக ஆழமான தொடர்புகளை உருவாக்கவும், ஆற்றலைப் பெறவும், போராட்டக்காரர்கள் செயல்பட வேண்டும்.

ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து பணியாற்ற தயார்: நரேந்திர மோடி 

அவ்வாறு செய்வதற்கு சிங்கள மற்றும் பௌத்த தேசியவாதத்தின் நச்சுப் பாரம்பரியத்தை மாற்றுவது அவசியமாகும், இந்த தேசியவாத நச்சு பாரம்பரியமே, சித்தாந்த மையத்தை உருவாக்கி, பல தலைமுறைகளாக வன்முறை மற்றும் ஊழல் அரசியல்வாதிகளுக்கு மறைப்பை வழங்கி வந்துள்ளது.

எனவே நாடு முழுவதிலும் உள்ள குடிமக்களால் அந்த மரபு கடுமையாக சவாலுக்கு உட்படுத்தப்பட்டால் மட்டுமே, ஊழல், பொருளாதார முறைகேடு, சர்வாதிகாரம், இராணுவமயமாக்கல் மற்றும் அரச அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தல் போன்ற நீண்டகால ஜனநாயக விரோத செயல்களில் இருந்து தப்பிக்க இலங்கைக்கு உண்மையான வாய்ப்பு கிடைக்கும் என்று சர்வதேச நெருக்கடிகளுக்கான குழுவின் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

உரும்பிராய், கோப்பாய், Ontario, Canada

14 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ottawa, Canada, Toronto, Canada

08 Nov, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Markham, Canada

10 Nov, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, Wuppertal, Germany, Toronto, Canada, Ottawa, Canada

13 Nov, 2025
மரண அறிவித்தல்

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Mississauga, Canada

14 Dec, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

27 Oct, 2024
நன்றி நவிலல்

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், உடுப்பிட்டி, Worthing, United Kingdom

13 Nov, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
மரண அறிவித்தல்

பெரியபளை, கல்கிசை, கனடா, Canada

13 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, Mordon, United Kingdom

15 Dec, 2019
மரண அறிவித்தல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கரணவாய், கொழும்பு, London, United Kingdom

07 Nov, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, Stuttgart, Germany, Mont-de-Marsan, France

15 Oct, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, நுணாவில், Toronto, Canada

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், ஏழாலை, Bad Harzburg, Germany

10 Nov, 2025
16ம் நாள் அந்திரெட்டியும்(சொர்க்கவாசல்), நன்றி நவிலலும்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, Bremen, Germany

10 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, பேர்ண், Switzerland

12 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, உருத்திரபுரம்

15 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Les Pavillons-sous-Bois, France

05 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

சரவணை கிழக்கு, வைரவபுளியங்குளம்

17 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், சண்டிலிப்பாய், London, United Kingdom

11 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US