புலம்பெயர் உண்டியல் முறையால் தடுமாறும் இலங்கை! அரச வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி (Video)
அரச வங்கிகள் அரச நிறுவனங்களுக்கான பொறுப்புகளை ஏற்றது, அரசாங்கத்திற்கு கூடுதலான கடன்களை கொடுத்தது, அரச நிறுவனங்களின் கடன்களை சுமப்பது என அரச வங்கிகள் மிக மோசமான நிலைக்கு சென்றுவிட்டன என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர் கலாநிதி கோ. அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
அரச வங்கிகளின் இந்த மோசமான நிலைக்கு காரணம் வங்கிகள் அல்ல, அரசாங்கத்தின் அழுத்தம், குறிப்பாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இலங்கை மின்சார சபையின் நட்டங்களை எல்லாம் இந்த வங்கிகள் ஊடாகத்தான் அவர்கள் ஈடு செய்தார்கள். அந்தவகையில் வங்கிகளின் பெருமளவான சொத்துகள் வீண்விரயம் செய்யப்பட்ட எனவும் தெரிவித்துள்ளார்.
ஆபத்தை தவிர்ப்பதற்கு முகம் தெரியாத இராணுவ அதிகாரியை களமிறக்கிய கோட்டாபய (VIDEO) |