நாட்டின் சுகாதாரத் துறை எதிர்கொள்ளும் நெருக்கடி நிலை
இலங்கையின் சுகாதாரத் துறை கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
அண்மைய பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரமின்மை காரணமாக 2,500இற்கும் மேற்பட்ட நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அரச மருத்துவர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
மருத்துவ நிபுணர்களின் வெளியேற்றம் தொடர்கிறது. இதன் காரணமாக, மருத்துவமனை சேவைகளை நிலைநிறுத்துவதிலும் பொதுமக்களுக்கு போதுமான சுகாதார சேவையை வழங்குவதிலும் பெரும் சவால்கள் ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் செயலாளர் பிரபாத் சுகததாச கூறியுள்ளார்.
வெளியேற்றம்
எனவே> பொருளாதார நீதி, நியாயம் மற்றும் சாதகமான தொழில்முறை சூழலை உறுதி செய்வதன் மூலம் மருத்துவர்கள் நாட்டில் தங்க ஊக்குவிக்கும் ஒரு திட்டத்திற்கான திட்டங்கள் சுகாதார அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
எனினும், மருத்துவர்களைப் பாதுகாப்பதற்கான நிரந்தர பொறிமுறையை அமைச்சகம் இன்னும் ஆரம்பிக்கவில்லை என்று சுகததாச தெரிவித்துள்ளார்.
அமைச்சின் “குறுகிய பார்வை மற்றும் திறமையற்ற கொள்கைகள்” மருத்துவ நிபுணர்களின் வெளியேற்றத்தை துரிதப்படுத்தியுள்ளன என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மருத்துவர்களைப் பாதுகாப்பது கொள்கை முன்னுரிமை என்று அரசாங்கமும் சுகாதார அமைச்சரும் பகிரங்கமாகக் கூறினாலும், அமைச்சின் நடவடிக்கைகள் அவர்களைத் தக்கவைத்துக்கொள்வதற்குப் பதிலாக அவர்களை விரட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




