மைத்திரிக்கு எதிராக குற்றவியல் குற்றச்சாட்டு? செயற்குழு கூட்டத்தில் நாளை விவாதம் 2 days ago
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது குற்றவியல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதற்கான பரிந்துரை தொடர்பில் நாளை ஆராயப்படும்.
இந்த விடயம் தொடர்பில் நாளை இடம்பெறும் கட்சி செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது. கட்சியின் பொது செயலாளர் தயாசிறி ஜயசேகர இதனை கூறியுள்ளார்.
இன்று நடைபெற்ற கட்சியின் மத்திய குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு இன்று பிற்பகல் கட்சி அலுவலகத்தில் கூடியது. ஊடகவியலாளர்கள் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கேள்வி எழுப்பினர், எனினும், கட்சியின் செயலாளர் பதில் கூறுவார் என முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, "செயற்குழுவில் ஒரு யோசனை தாக்கல் செய்யப்படும்." என தெரிவித்துள்ளார்.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 4 மணி நேரம் முன்
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam
குறைந்த விலையில் கிடைக்கும் இந்த மீனை கட்டாயம் சாப்பிடுங்க.... முடி வளர்ச்சி முதல் இதய நோய் வரை தீர்வு Manithan
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan