யாழில் பல மில்லியன் ரூபா பெறுமதி வாய்ந்த கஞ்சா மீட்பு
யாழ்ப்பாணம் - வெற்றிலைக்கேணி பகுதியில் 42 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள கேரள கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
கடற்படையினரால் நேற்று (08.06.2023) மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் 128 கிலோவுக்கும் அதிகமான (ஈரமான எடை) கேரளா கஞ்சா கடலில் சிக்கியது.
விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான 04 சாக்கு மூட்டைகளை மீட்டுள்ளதுடன் அதில் இருந்து 53 பொதிகள் அடைக்கப்பட்டிருந்த சுமார் 128 கிலோ 100 கிராம் (ஈரமான எடை) கேரள கஞ்சா இருந்துள்ளது.
கைவிடப்பட்ட கஞ்சா
தொடர்ச்சியான கடற்படை நடவடிக்கைகள் காரணமாக, கேரள கஞ்சாவை நாட்டிற்கு கொண்டு வர முடியாமல் கடத்தல்காரர்கள் கைவிட்டுச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மீட்கப்பட்ட கேரள கஞ்சாவை மேலதிக நடவடிக்கைக்காக அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் வரை கடற்படை பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 3 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam
