இலங்கை மற்றும் மாலைதீவு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் கிரிக்கெட் போட்டி - ஜனாதிபதியும் விளையாடலாம்
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணிக்கும் மாலைதீவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணிக்கும் இடையில், கிரிக்கெட் போட்டி ஒன்றை ஏற்பாடு செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மாலைதீவு விளையாட்டுத்துறை அமைச்சர் இதற்கான அழைப்பை அனுப்பி வைத்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணி மாலைதீவில் போட்டியில் கலந்துக்கொள்வதற்காக புறப்பட்டுச் செல்ல உள்ளதுடன் இறுதியில் மாலைதீவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணி இலங்கையில் போட்டியில் கலந்துக்கொள்ள உள்ளது.
மாலைதீவு அணியில் அந்நாட்டின் ஜனாதிபதியும் விளையாடலாம் என மாலைதீவு விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
போட்டிகளுக்கான செலவுகளை இரு நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொறுப்பேற்பார்கள் என கூறப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இந்த கிரிக்கெட் போட்டிகள் அண்மைய தினம் ஒன்றில் நடைபெறாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரோஹினிக்கு வந்த அதிர்ச்சி போன் கால், பதற்றத்தில் மொத்த குடும்பத்தினர்.... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam