பிரித்தானிய கடற்கரை ஒன்றில் கரை ஒதுங்கிய ஆயிரக்கணக்கான நண்டுகள்
பிரித்தானியாவில் வடக்கு வேல்ஸிலுள்ள Aberffraw என்னுமிடத்தில் அமைந்துள்ள கடற்கரையில், ஆயிரக்கணக்கான இறந்த நண்டுகளின் ஓடுகள் கிடப்பதைக் கண்ட மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதன்போது , ஆயிரக்கணக்கான spider crabs வகை நண்டுகளே கடற்கரையில் குவிந்து கிடந்துள்ளன.
இறந்த நண்டுகளின் ஓடுகள்
அத்துடன், இவ்வாறான நிகழ்வை கண்டு கவலைப்படவோ, பயப்படவோ அவசியம் இல்லை என Anglesey Sea Zoo என்னும் அமைப்பின் இயக்குநரான Frankie Hobro தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த நிகழ்வு நல்ல விடயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதாவது, நண்டுகள், இறால் மீன்கள் போன்ற உயிரினங்கள், வளர்ச்சியின் ஒரு பாகமாக தங்கள் உடலின் மேலுள்ள ஓட்டை அகற்றுவது வழமையான விடயம் என கூறியுள்ளார்.
எனவே, நண்டுகளின் ஓடுகள் கரை ஒதுங்கியுள்ளமையினால் அவை இறந்து விட்டதாக என எண்ணத் தேவையில்லை என்றும், ஆயிரக்கணக்கான நண்டுகள் இனப்பெருக்கம் மேற்கொள்வது மற்றும் வளர்வதையே இது காட்டுவதாகவும் இது ஒரு நேர்மறையான விடயம் என Frankie Hobro குறிப்பிட்டுள்ளார்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan