வீதிகளில் கட்டப்படும் மாடுகள் ஏலத்தில் விடப்படும்: தவிசாளர் எச்சரிக்கை(Photos)
வலி. மேற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட வீதிகளில் கட்டப்படும் மாடுகள் ஏலத்தில் விட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என வலி. மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், சங்கானை - விழிசிட்டி 1ஆம் வீதியில் மாடுகள் தொடர்ந்து கட்டப்படுவதால் வீதியால் பயணம் செய்பவர்கள் பல்வேறு சிரமங்களையும் விபத்துக்களையும் எதிர்நோக்க வேண்டியுள்ளது.
குறித்த வீதியில் மாடுகளைக் கட்டுவதனால் நேற்றும்(17) 3 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில் இன்று (18) காலை அப்பகுதிக்கு விஜயம் செய்த பிரதேச சபையின் ஊழியர்கள் நிலைமைகளைப் பார்வையிட்டு மாடுகளின் உரிமையாளர்களுடன் கலந்துரையாடிவிட்டு தவிசாளருக்கு இது தொடர்பாகத் தெரியப்படுத்தினர்.
அதனைத் தொடர்ந்து தவிசாளர் இவ்வாறானதொரு எச்சரிக்கையை விடுத்துள்ளார்.






இந்தியா-பாக் பதற்றம் தீவிரம்: பாகிஸ்தான் அரசு ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் செய்தி News Lankasri
