மட்டக்களப்பு எல்லைக் கிராமங்களில் தொடரும் பசு வதைகள்: மக்கள் விசனம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள எல்லைக் கிராமங்களில் மாடுகளைக் களவாடுதல் அல்லது காயப்படுத்துதல் என்பன தொடர்ந்து நடைபெற்று வருவதாக அப்பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
கடந்த (18.06.2023) ஆம் திகதி மட்டக்களப்பு - கிரான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட எல்லைக் கிராமங்களான மைலத்தமடு, மாதவணை பிரதேசத்தில் வயிற்றில் கன்றுடன் இருந்த பசு ஒன்று துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டு இறைச்சியைக் களவாடிச் சென்றதன் பின்னர் பசுவின் தலை கழிவுகள் மற்றும் வயிற்றில் இருந்த கன்று என்பனவும் அவ்விடத்திலேயே வீசப்பட்டுள்ள நிலையில் காணப்பட்டதாக அப்பகுதி கால்நடை வளர்ப்பாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு கொலை செய்யப்பட்ட பசு மகாவலி கண்காணிப்பு காரியாலயத்திற்கு மிக அருகில் காணப்பட்டதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுபோன்ற செயற்பாடுகள் மற்றும் மாடுகளைக் களவாடுதல் அல்லது காயப்படுத்துதல் என்பன இப்பிரதேசத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
தமிழர்களை மிரட்டும் செயற்பாடுகள்
இந்த விடயம் குறித்து கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
அப்பிரதேசத்தை அரசாங்கம் மகாவலி டீ வலயமாக பிரகடணப்படுத்தப்பட்டதன் பின்னரே இவ்வாறு தமிழ் மக்களது கால்நடைகளைச் சுடுவதும், களவாடுவதும், தமிழர்களை மிரட்டுவதுமான செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக அப்பகுதியில் பரம்பரை பரம்பரையாக தமது கால்நடைகளை வளர்த்துவரும் தமிழ் மக்கள் அங்கலாய்க்கின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் 7 மணி நேரம் முன்

முதல்முறையாக ஏவுகணை சோதனை நடத்திய ஆசிய நாடு - சீனாவை எதிர்த்து பாதுகாப்புத் திட்டம் தீவிரம் News Lankasri

பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் Amazon., 40 பில்லியன் பவுண்டு முதலீடு News Lankasri
