இலங்கையில் 1,78,087 பேருக்கு கோவிட் - 19 தடுப்பூசி ஏற்றல்!
இலங்கையில் கடந்த 29ஆம் திகதி முதல் நேற்று வரை ஒரு இலட்சத்து 78 ஆயிரத்து 87 பேருக்குக் கோவிட் - 19 தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தியாவால் இலங்கைக்கு 5 இலட்சம் கோவிட் - 19 தடுப்பூசிகள் நன்கொடையாக வழங்கப்பட்டன.
இவற்றை 2 இலட்சத்து 50 ஆயிரம் பேருக்குச் செலுத்த முடியும். அந்தவகையில் முதற்கட்டமாக கோவிட் - 19 ஒழிப்பு சமரில் முன்களப் பணியாளர்களாகச் செயற்படும் சுகாதார மற்றும் பாதுகாப்புப் பிரிவினருக்கு தடுப்பூசி கடந்த 29ஆம் திகதி முதல் ஏற்றப்பட்டு வருகின்றது.
இதன்படி 29ஆம் திகதி 5 ஆயிரத்து 286 முன்கள பணியாளர்களுக்கும், 30ஆம் திகதி 32 ஆயிரத்து 539 பேருக்கும், 31ஆம் திகதி 21 ஆயிரத்து 329 பேருக்கும், பெப்ரவரி முதலாம் திகதி 36 ஆயிரத்து 396 பேருக்கும், 2ஆம் திகதி 23 ஆயிரத்து 217 பேருக்கும், 3ஆம் திகதி 21 ஆயிரத்து 147 பேருக்கும் தடுப்பூசி ஏற்றப்பட்டது.
அத்துடன், 4ஆம் திகதி 6 ஆயிரத்து 413 பேருக்கும், 5ஆம் திகதி 9 ஆயிரத்து 983 பேருக்கும், 6ஆம் திகதி 3,838 பேருக்கும்,7ஆம் திகதி 1,625 பேருக்கும், 8ஆம் திகதி 5,989 பேருக்கும், 9ஆம் திகதி 6,431 பேருக்கும், 10ஆம் திகதி 2,532 பேருக்கும், 11ஆம் திகதி 1,362 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 21 மணி நேரம் முன்

பட்டப்பகலில் கொடூர சம்பவம்... பொதுமக்கள் கண் முன்னே புலம்பெயர் குடும்பம் எடுத்த அதிர்ச்சி முடிவு News Lankasri

அய்யனார் துணை, சிறகடிக்க ஆசை, சின்ன மருமகள் ஒன்று சேர்ந்த 3 சீரியல் நாயகிகள்.. என்ன விஷயம், வீடியோவுடன் இதோ Cineulagam
