கோவிட் - 19 தடுப்பூசி செயற்பட 14 தொடக்கம் 21 நாட்கள் ஆகும்! - பேராசிரியர் நீலிகா மாலவிகே
கோவிட் - 19 தடுப்பூசியினால் நோயெதிர்ப்பு அமைப்பு செயற்பட குறைந்தது 14 முதல் 21 நாட்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறையின் பேராசிரியர் நீலிகா மாலவிகே இதனை தெரிவித்துள்ளார்.
கோவிட் - 19 தடுப்பூசியில் உள்ள குறைபாடுகள் குறித்து பல்வேறு தரப்பினரின் கூற்றுகளுக்கு பதிலளிக்கும் விதமாக அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எந்தவொரு தடுப்பூசியும் உடனடியாக யாருடைய நோயெதிர்ப்பு சக்திக்கும் பதிலளிக்காது. இந்த செயல்முறைக்கு கோவிட் -19 தடுப்பூசியும் விதிவிலக்கல்ல என்று அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை கோவிட் - 19 தொற்றுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தப்பட்ட சுமார் 2,000 சுகாதார ஊழியர்களின் இரத்த மாதிரிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் மூலம் இதுவரை சாதகமான முடிவுகளைக் காட்டியுள்ளது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பங்கர் பஸ்டராக உருவெடுக்கும் இந்தியாவின் அக்னி ஏவுகணை - சீனா, பாகிஸ்தானுக்கு கடும் அச்சுறுத்தல் News Lankasri

திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
