நாட்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மரணத்திலிருந்து தப்ப ஒரே வழி இதுவே - சன்ன ஜயசுமன
தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வரும் தடுப்பூசி ஏற்றுகை நடவடிக்கைகளின் பலன்களை எதிர்வரும் அக்டோபர் மாதம் உணர்ந்து கொள்ள முடியும் என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
20 முதல் 30 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 30 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு கோவிட் தடுப்பூசி ஏற்றுகை நடவடிக்கை விரைவில் பூர்த்தியாகும்.
20 முதல் 30 வயதுடையவர்களுக்கும் தடுப்பூசி ஏற்றப்பட்டு வரும் நிலையில் அக்டோபர் மாதம் 3ஆம் வாரமளவில் பெரும் எண்ணிக்கையிலானவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி விடும்.
60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் வேறு நாட்டப்பட்ட நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கோவிட் தடுப்பூசி ஏற்றிக் கொண்டால் மேலும் பாதிப்புக்கள் ஏற்படும் என நினைத்து தடுப்பூசி ஏற்றிக் கொள்வதில்லை.
இவ்வாறானவர்கள் மரணத்திலிருந்து தப்புவதற்கான ஒரே வழி தடுப்பூசி ஏற்றுகையாகும் என பேராசிரியர் சன்ன ஜயசுமன அறிவித்துள்ளார்.
