நாட்டுக்கு வருகை தந்த முதல் சுற்றுலாப் பயணிகள் குழுவில் 3 பேருக்கு கொவிட்
நீண்ட இடைவெளியின் பின்னர் நாட்டுக்கு வருகை தந்த முதல் சுற்றுலாப் பயணிகள் குழுவில் மூன்று பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.
அண்மையில் உக்ரேய்னிலிருந்து இந்த சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திருந்தனர்.
அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளிகள் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைப் பணிப்பாளர் டொக்டர் ஹேமந்த ஹேரத் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
கடந்த 28ம் திகதி முதல் தொகுதி சுற்றுலாப் பயணிகள் உக்ரேய்னிலிருந்து இலங்கை வருகை தந்திருந்தனர்.
சுற்றுலாப் பயணிகளுக்கு நாட்டை திறந்து விடும் நோக்கில் பரீட்சார்த்த அடிப்படையில் இவ்வாறு உக்ரேய்ன் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஸ்வர்யா லட்சுமி நிஜத்தில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா.. மாமன் படத்தில் அப்படி நடிக்க இதுதான் காரணமா Cineulagam

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri
