கோவிட் பரிசோதனை மேற்கொள்ள முடியாத நிலையில் கிளிநொச்சி மாவட்டம்
கிளிநொச்சி மாவட்டத்தில் கோவிட் பரிசோதனை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சுகாதார தரப்பு தெரிவித்துள்ளது.
மாவட்டத்தில் தற்போது 800 அண்டிஜன் பரிசோதனை மேற்கொள்வதற்கே அண்டிஜன் பரிசோதனை கருவிகள் இருப்பதாகவும் இதனால் கடுமையான நோய் அறிகுறிகளுடன் வருகின்றவர்களை தவிர சாதாரண நோய் அறிகுறிகளுடன் வருகின்றவர்களை பரிசோதனை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பரிசோதனை எண்ணிக்கையினை மட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
மேற்படி 800 பிரசோதனை கருவிகள் ஒரு சில நாட்களில் முடிவடைந்து விடும் என்றும் அதற்கு பின்னர் கொழும்பிலிருந்து பரிசோதனை கருவிகள் கிடைக்கப்பெறுகின்ற போதே தொடர்ந்தும் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும், கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது மீண்டும் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



