பாடசாலை மாணவர்கள் மத்தியில் வேகமாக பரவும் கோவிட் தொற்று
பாடசாலை மாணவர்கள் மத்தியில் கோவிட் வைரஸ் தொற்று வேகமாக பரவும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக சுகாதார துறையினர், சுகாதார அமைச்சுக்கு அறிவித்துள்ளனர்.
இதனடிப்படையில் அனைத்து சுகாதார வைத்திய அதிகாரிகளையும் கொண்டு, இது சம்பந்தமாக பின்னறிவிப்பு மற்றும் ஆய்வு செய்து தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதன் பின்னர் எடுக்க வேண்டிய தீர்மானங்களை உடனடியாக எடுக்குமாறு கோரியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) உதவி செயலாளர் நவீன் டி சொய்சா (Naveen D. Zoysa) தெரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவர்கள் மத்தியில் கோவிட் தொற்று நோய் பரவல் அதிகரிப்பை காட்டுவதால், தொடர்ந்தும் பரவுவதை தடுக்க தேவையான முடிவுகளை தாமதமின்றி எடுக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாடசாலைகள் தற்போது திறக்கப்பட்டுள்ளதால், நிலைமையை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் செய்துள்ள மாஸ் வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... என்ன தெரியுமா? Cineulagam
Bigg Boss: Bigg Boss: உங்கள் பயணம் இத்துடன் முடிந்தது... ஒலித்த பிக்பாஸ் குரல்! வெளியேறிய போட்டியாளர்கள் Manithan