பாடசாலை மாணவர்கள் மத்தியில் வேகமாக பரவும் கோவிட் தொற்று
பாடசாலை மாணவர்கள் மத்தியில் கோவிட் வைரஸ் தொற்று வேகமாக பரவும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக சுகாதார துறையினர், சுகாதார அமைச்சுக்கு அறிவித்துள்ளனர்.
இதனடிப்படையில் அனைத்து சுகாதார வைத்திய அதிகாரிகளையும் கொண்டு, இது சம்பந்தமாக பின்னறிவிப்பு மற்றும் ஆய்வு செய்து தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதன் பின்னர் எடுக்க வேண்டிய தீர்மானங்களை உடனடியாக எடுக்குமாறு கோரியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) உதவி செயலாளர் நவீன் டி சொய்சா (Naveen D. Zoysa) தெரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவர்கள் மத்தியில் கோவிட் தொற்று நோய் பரவல் அதிகரிப்பை காட்டுவதால், தொடர்ந்தும் பரவுவதை தடுக்க தேவையான முடிவுகளை தாமதமின்றி எடுக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாடசாலைகள் தற்போது திறக்கப்பட்டுள்ளதால், நிலைமையை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
ஜனவரி 1ஆம் திகதிக்கு முன் இந்த 9 பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு ஒரு அவசர செய்தி News Lankasri
முகேஷ் அம்பானியிடம் இருந்து ரூ 2.6 லட்சம் கோடி இழப்பீடு கோரும் இந்தியா... தீர்ப்பு மிக விரைவில் News Lankasri
பல்லவன் யார் என்ற பல வருட ரகசியத்தை கூறிய நடேசன், ஷாக்கில் நிலா... அய்யனார் துணை எமோஷ்னல் எபிசோட் Cineulagam