வவுனியாவில் 46 பேருக்கு கோவிட் தொற்று உறுதி
வவுனியாவில் கோவிட் தொற்று 46 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் கோவிட் தொற்றுக்கு இலக்கானவர்களுடன் தொடர்புகளை பேணியவர்கள், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் எழுமாறாக பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் சில நேற்று இரவு வெளியாகியுள்ளன.
வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக கோவிட் தொற்று 46 நபர்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தொற்றாளர்களையும், அவர்களுடன் தொடர்புடையவர்களையும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.