கோவிட் தொற்றாளர்கள் அடுத்த சில நாட்களில் அதிகரிக்கலாம் - விசேட வைத்திய நிபுணர் எச்சரிக்கை
இந்தியாவுடன் ஒப்பிடும்போது இலங்கையில் நாளாந்தம் பதிவாகும் கோவிட் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அடுத்த சில நாட்களிலும் நாட்டில் கோவிட் தொற்று உறுதியாகும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பயணக் கட்டுப்பாடுகள் மட்டுமல்லாமல், சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு இணங்க மக்களின் நடத்தையை கட்டுப்படுத்துவதன் மூலம் கோவிட் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.