இலங்கையில் பரவும் வைரஸ் திரிபுகளை அறிய இன்று முதல் மீண்டும் பரிசோதனை
இலங்கைக்குள் பரவி வரும் கோவிட் - 19 வைரஸ் திரிபுகளை கண்டறிய இன்று முதல் மீண்டும் பரிசோதனைகளை ஆரம்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கோவிட் தொற்றாளர்களிடம் பெற்றுக் கொண்ட 16 மாதிரிகளை பயன்படுத்தி இந்த பரிசோதனை நடத்தப்படவுள்ளது.
பரிசோதனைகளின் அறிக்கையை எதிர்வரும் 18ஆம் திகதி வெளியிட முடியும் என ஜீவந்தர குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பிரித்தானியாவில் பரவி வரும் டெல்டா திரிபு நாட்டில் 10 பிரதேசங்களிலும், இந்தியாவில் பரவி வரும் திரிபு தனிமைப்படுத்தல் நிலையம் ஒன்றிலும் அண்மையில் கண்டறியப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.