கட்டுமானம் ஒன்றில் ஈடுபட்டிருந்த இரண்டு தொழிலாளர்களுக்கு டெல்டா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம்
கொழும்பு, கொம்பனித்தெருவின் கட்டடத்தளக் கட்டுமானம் ஒன்றில் ஈடுபட்டிருந்த இரண்டு தொழிலாளர்கள் "டெல்டா" கோவிட் - 19 மாறுப்பாட்டால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இவர்கள் இருவரும் புதிய டெல்டா வைரஸால் முதலில் பாதிக்கப்பட்டவரின் நெருங்கியவர்களாக இருந்துள்ளதாக கொழும்பு மாநகர தலைமை மருத்துவ அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.
இந்த இரண்டு தொழிலாளர்களும் ஏற்கனவே சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், விரைவில் முடிவுகள் வரவிருப்பதாகவும் விஜயமுனி சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த இருவரும் ஒரே மாதிரியான மாறுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை சோதனை முடிவுகள் வந்தவுடன் மட்டுமே உறுதிப்படுத்த முடியும் என்று அவர் கூறியுள்ளார்.
எனினும் இரண்டு தொழிலாளர்களும் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கட்டுமான தளத்தில் உள்ள அனைத்து தொழிலாளர்களையும் தனிமைப்படுத்த உத்தரவிட்டுள்ளதாக விஜயமுனி தெரிவித்துள்ளார்.
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 10 மணி நேரம் முன்
ஈரானில் இருந்து யுரேனியம் மீட்டு எடுக்கப்படும்: புதிய ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அதிரடி News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan