கொழும்பு உள்ளிட்ட இலங்கையின் சில பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ள பிரித்தானியாவில் பரவியுள்ள கோவிட்
பிரித்தானியாவில் பரவியுள்ள கோவிட் வைரஸானது இலங்கையின் பல பகுதிகளிலும் கண்டறியப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழகத்தின் வைத்தியர் சந்திம ஜீவன்தர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
கொழும்பு, பொரலஸ்கமுவ மற்றும் குருணாகலை பகுதிகளில் பிரித்தானியாவில் பரவும் வகையான கோவிட் வைரஸ் இனங்காணப்பட்டுள்ளது.
அப்பகுதிகளில் மேற்கொண்ட பெற்றுக் கொண்ட பிசிஆர் பரிசோதனைகளில் முடிவுகளின் அடிப்படையில் இது தொடர்பில் கண்டறியப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இலங்கையில் தற்போது வேகமாக கோவிட் வைரஸ் பரவி வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.