கோவிட் தொற்றால் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளதாக எச்சரிக்கை - செய்திகளின் தொகுப்பு
இலங்கையில் அதிகரித்துச் செல்லும் கோவிட் தொற்றால் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளதாகவும், எப்போதும் எவருக்கு வேண்டுமாக இருந்தாலும் கோவிட் தொற்றலாம் என கோவிட் தடுப்பு இராஜாங்க அமைச்சர சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள கோவிட் தொற்றாளர்களை விட அதிகமானவர்கள் சமூகத்தில் இருக்கக் கூடும் எனவும், அதனால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எந்தவொரு நபருக்கும் கோவிட் தொற்று ஏற்படக்கூடும் .எனவே மக்களை பாதுகாப்பாக இருக்குமாறும் இராஜாங்க அமைச்சர சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே குறிப்பிட்டுள்ளார்.
கோவிட் தொற்றாளர்கள் மேலும் அதிகரித்து வைத்தியசாலைகள் நிரம்பினால் சுகாதார துறை பாரிய நெருக்கடிகளை சந்திக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது முக்கிய செய்திகளின் தொகுப்பு,