பொது சுகாதார பரிசோதகர் மற்றும் நோயாளர் காவு வண்டி சாரதி ஆகியோருக்கு கோவிட் தொற்று
வவுனியா நகரசபையின் பொது சுகாதார பரிசோதகர் ஒருவருக்கும், நோயாளர் காவு வண்டி சாரதி ஒருவருக்கும் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த இருவருக்கும் தடிமன் மற்றும் இருமல் ஏற்பட்டதையடுத்து மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையிலேயே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வவுனியாவில் கோவிட் தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் அதனைக் கட்டுப்படுத்த மக்கள் மத்தியில் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளல், தொற்றாளர்களை தனிமைப்படுத்தல், தொற்றாளர்களை கண்காணித்தல், தனிமைப்படுத்தப்பட்டவர்களைக் கண்காணித்தல், தொற்றாளர்களை சிகிச்சை நிலையங்களுக்குக் கொண்டு செல்லல் உள்ளிட்ட கள வேலைகளில் ஈடுபட்ட வவுனியா நகரசபையின் சுகாதார பரிசோதகர் ஒருவரும், நோயாளர் காவு வண்டி சாரதியுமே இவ்வாறு கோவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
இதனையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கோவிட் சிகிச்சை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அவர்களுடன் தொடர்புடையவர்களையும் சுகாதாரப் பிரிவினர் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதேவேளை, குறித்த சுகாதார பரிசோதகருக்கு சில மாதங்களுக்கு முன்னரும் கோவிட் தொற்று ஏற்பட்டு அவர் குணமடைந்திருந்தமையும், இரு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.





பிரித்தானியா நோக்கி பறந்த ஏர் இந்தியா விமானம்: கடைசி நேரத்தில் RAT இயக்கப்பட்டதால் பரபரப்பு News Lankasri

ஒரு நாள் கூத்து காட்டும் போட்டியாளர்.. இதுக்கு மேல தாங்கமாட்டாரு- திவாகரனை ஓரங்கட்டிய பிரபலம் Manithan
