கறுப்பு பூஞ்சை காரணமாக மரணம் பதிவானதாக வெளியான தகவலில் உண்மையில்லை!
கறுப்பு பூஞ்சை காரணமாக கோவிட் தொற்று உறுதியாளர் ஒருவர் உயிரிழந்தார் என வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கராப்பிட்டிய போதான வைத்தியசாலையில் கோவிட் தொற்றுக்கு இலக்காகியிருந்த நபர் ஒருவர் கறுப்பு பூஞ்சை நோயினால் உயிரிழந்தார் என சில ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
எனினும் இந்த மரணம் கறுப்பு பூஞ்சை காரணமாக சம்பவிக்கவில்லை என வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் செல்டன் பெரேரா (Dr. Shelton Perera) தெரிவித்துள்ளார்.
இந்த நபர் கடந்த செப்டம்பர் மாதம் 26ம் திகதி உயிரிழந்தார் எனவும், மரணம் தொடர்பில் சந்தேகம் காரணமாக நுரையீரல் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.
மரணம் தொடர்பிலான அறிக்கையில் கறுப்பு பூஞ்சைகள் நுரையீரலில் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும் சட்ட வைத்திய அதிகாரி நடாத்திய பிரேதப் பரிசோதனையின் போது குறித்த நபர் கோவிட் நிமோனியாவினால் உயிரிழந்தார் எனவும், கறுப்பு பூஞ்சையினால் அல்ல எனவும் வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்தி.....
கோவிட் நிமோனியா கறுப்பு பூஞ்சை தொற்றால் இலங்கையில் இறந்துள்ள முதல் நபர்
என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri
நான் சிவனேனு தானடா இருந்தேன்: நயன்தாரா 'நார்மல் people கிடையாது' ட்ரோல் பற்றி விக்னேஷ் சிவன் விளக்கம் Cineulagam