சந்தேகநபருக்கு பிணை வழங்க கோவிட் தொற்றை காரணமாக கருத முடியாது - மேன்முறையீட்டு நீதிமன்றம்
காவலில் உள்ள சந்தேகநபருக்கு பிணை வழங்குவதற்கான சிறப்பு காரணியாக கோவிட் தொற்று நோய் சூழ்நிலையை கருத முடியாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரில் தடுப்புக் காவலில் உள்ள சந்தேகநபர் ஒருவர் சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட மறுசீராய்வு விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.
67 கிலோகிராம் எடையுள்ள ஹெரோயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், குறித்த நபர் கடந்த ஆண்டு சிலாபத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், கோவிட் வைரஸ் பரவலின் அபாயங்களின் அடிப்படையில் சந்தேகநபரை பிணையில் செல்ல அனுமதிக்குமாறு மேன் முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
எனினும், மேல்முறையீட்டு நீதிமன்றம் தற்போதைய தொற்றுநோய் நிலைமை அனைத்து கைதிகளுக்கும் பொதுவானது என்றும் பிணை வழங்குவதற்கு இதனை விதிவிலக்கான சூழ்நிலையாக கருத முடியாது என்றும் தீர்ப்பளித்துள்ளது.