இலங்கையில் கடுமையாகவுள்ள கோவிட் சட்டங்கள்
இலங்கையில் பொது போக்குவரத்து சேவையில் அமுல்படுத்தப்பட்டுள்ள சுகாதார சட்டங்களை பேருந்து உரிமையாளர்களும் பொது மக்களுக்கு மறந்து விட்டதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இதனால் சட்டத்திட்டங்களை மேலும் கடுமையாக செயற்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பேருந்தில் ஆசனங்களில் மாத்திரமே பயணிகள் பயணிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் தற்போது பேருந்துகளில் மக்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
சட்டங்கள் மறக்கப்பட்டுள்ளன. மக்கள் விருந்துகள் நடத்துகின்றார்கள். அதிக மக்களுடன் இணைந்து திருமண வைபங்களை நடத்துகின்றார்கள்.
இவ்வாறான செயற்பாடுகளினால் நாடு ஆபத்தான நிலைமைக்கு மீண்டும் சென்றுவிடும். இதனால் நாட்டில் மீண்டும் சட்டங்களை கடுமையாக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri