வடக்கில் இன்றும் 6 பேருக்கு கோவிட் - 19 தொற்று!
வடக்கு மாகாணத்தில் இன்றும் 6 பேருக்குக் கோவிட் - 19 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் ஒருவர் கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலைப் பணியாளர் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
"யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 377 பேரின் மாதிரிகள் இன்று பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. எவருக்கும் தொற்று இல்லை என அறிக்கை கிடைத்துள்ளது.
இதேவேளை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 416 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இவர்களில் 6 பேருக்குக் கோவிட் - 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
5 பேர் மன்னார் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் ஏற்கனவே தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களுடன் தொடர்புடையோர் என்ற அடிப்படையில் சுயதனிமைப்படுத்தலில் கண்காணிக்கப்பட்டவர்கள்.
கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலை பணியாளர் ஒருவருக்கும் கோவிட் - 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கோவிட் - 19 தொற்று அறிகுறிகளுடன் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட அவருக்கு இன்று இடம்பெற்ற பி.சி.ஆர். பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது" - என்றார்.
ஈஸ்டர் தாக்குதலை அடுத்து சிறையில் பிள்ளையானை சந்தித்த ராஜபக்சர்கள்! திடுக்கிடும் பல உண்மைகள் அம்பலம்
மகிந்த மட்டும் அந்த இருவரின் பேச்சைக் கேட்டிருந்தால் இன்று ஈழம் மலர்ந்திருக்கும்..! போர்க் கால இரகசியங்கள் கூறும் சரத் வீரசேகர
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam