வடக்கில் இன்றும் 6 பேருக்கு கோவிட் - 19 தொற்று!
வடக்கு மாகாணத்தில் இன்றும் 6 பேருக்குக் கோவிட் - 19 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் ஒருவர் கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலைப் பணியாளர் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
"யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 377 பேரின் மாதிரிகள் இன்று பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. எவருக்கும் தொற்று இல்லை என அறிக்கை கிடைத்துள்ளது.
இதேவேளை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 416 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இவர்களில் 6 பேருக்குக் கோவிட் - 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
5 பேர் மன்னார் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் ஏற்கனவே தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களுடன் தொடர்புடையோர் என்ற அடிப்படையில் சுயதனிமைப்படுத்தலில் கண்காணிக்கப்பட்டவர்கள்.
கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலை பணியாளர் ஒருவருக்கும் கோவிட் - 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கோவிட் - 19 தொற்று அறிகுறிகளுடன் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட அவருக்கு இன்று இடம்பெற்ற பி.சி.ஆர். பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது" - என்றார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா, CWC புகழ் மணிமேகலையிடம் கேட்ட ரசிகர்- அவர் கொடுத்த உண்மை பதில் Cineulagam

ராதிகாவிற்கு சீரியலில் இப்படியொரு டுவிஸ்டா? குழப்பத்தில் நிற்கும் கோபி.. இனி என்ன செய்ய போகிறார் தெரியுமா? Manithan

இந்த மாதத்துடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவுக்கு வருகிறதா?- வெளிவந்த விவரம், ரசிகர்கள் ஷாக் Cineulagam

இளவரசர் பிலிப்புடைய சவப்பெட்டியை சுமந்த இராணுவ அதிகாரிக்கு நிகழ்ந்த பரிதாபம்: ஒரு துயரச் செய்தி News Lankasri
