கொழும்பின் முக்கிய பகுதிகளில் கண்டறியப்படும் கோவிட் தொற்றாளர்கள்
கொழும்பு மாவட்டத்தில் வெள்ளவத்தை, நாரஹென்பிட்டிய மற்றும் கொம்பனித்தெரு உள்ளிட்ட பகுதிகளில் கோவிட் தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன.
வெள்ளவத்தையில் 58, கொம்பனித்தெருவில் 23, நரஹன்பிட்டியவில் 21 என்ற எண்ணிக்கையில் கோவிட் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை 6 மணிக்கு முடிவடைந்த 24 மணி நேர காலப்பகுதியில் கொழும்பு மாவட்டத்தில் மொத்தம் 318 பேர் வைரஸ் பாதிப்புடன் கண்டறியப்பட்டுள்ளனர்.
இதில் பம்பலப்பிட்டியில் 13, மட்டக்குளியவில் 36, அவிசாவெல்லயில் 39, தெமட்டகொடையில் 11 மற்றும் கிராண்ட்பாஸில் 12 தொற்றாளர்கள் உள்ளடங்குகின்றனர்.
இன்று காலை 6 மணிக்கு முடிவடைந்த 24 மணி நேர காலப்பகுதியில் இலங்கையில்
மொத்தம் 2196 பேர் கோவிட் தொற்றாளர்களாக கண்டறியப்பட்டுள்ளனர்.