வவுனியாவில் கோவிட் தொற்றால் மேலும் நால்வர் மரணம்
வவுனியாவில் கோவிட் தொற்றுக்குள்ளான மேலும் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இவர்களில் மூவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து குறித்த மூவரும் கோவிட் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், வீட்டில் மரணமடைந்த ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கும் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி கோவிட் தொற்று காரணமாக வவுனியாவில் மேலும் நான்கு பேர் மரணமடைந்துள்ளனர்.
வவுனியா, வைரவபுளியங்குளம், தோணிக்கல், கனகராயன்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூவரே இவ்வாறு மரணமடைந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி அவர்களது உடலைத் தகனம் செய்யச் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.



