தமிழகத்தில் ஒரே நாளில் 810 குழந்தைகளுக்கு கோவிட் - இப்படிக்கு உலகம்
இந்தியாவில் கோவிட் இரண்டாவது அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், தமிழகத்தில் ஒரே நாளில் 810 குழந்தைகளுக்கு கோவிட் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா முழுவதும் கோவிட் பெருந்தொற்றின் இரண்டாவது அலை மிக தீவிரமாக அதன் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
நாளுக்கு நாள் பல ஆயிரம் பேர்கள் கோவிட் பாதிப்பால் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நாட்டின் பல மாநிலங்களில் மக்கள் மருந்து, ஆக்ஸிஜன், படுக்கை வசதி உள்ளிட்டவைகளின் பற்றாக்குறையால் அவதிப்பட்டும் வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழகத்தில் நேற்று 12 வயதுக்குட்பட்ட 810 குழந்தைகளுக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இப்படிக்கு உலகம் தொகுப்பு,