மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் இரு பெண் பொலிஸார் உட்பட 3 பேருக்கு கோவிட்
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் 76 பொலிஸாருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொண்டதில் இரு பெண் பொலிஸார் உட்பட 3 பேருக்கு கோவிட் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த பரிசோதனைகள் நேற்று(23) முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரு பொலிஸார் விடுமுறையில் தமது வீட்டிற்குச் சென்ற நிலையில், அவர்களுக்கு அங்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொண்ட நிலையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த பொலிஸ் உத்தியோகத்தரின் கடமையாற்றிய பொலிஸ் நிலயத்திலுள்ள பிரிவிலுள்ள பொலிஸார் 76 பேருக்கு அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதில் 2 பெண் பொலிஸாருக்கும் ஏற்கனவே கோவிட் என அடையாளம் காணப்பட்ட பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் பிள்ளை ஒருவர் உட்பட 3 பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்களைச் சிகிச்சைக்காக கோவிட் சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைக்கு
அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.