பாதுகாப்பாக இருங்கள் எனும் தொனிப்பொருளில் கோவிட் ஒழிப்பு வேலைத்திட்டம்
"பாதுகாப்பாக இருங்கள்" எனும் தொனிப்பொருளில் கோவிட் ஒழிப்பு வேலைத்திட்டம் கிளிநொச்சி ஊடக மையத்தினால் கிளிநொச்சியில் ஆரம்பமாகியுள்ளது.
கோவிட் தொற்று காரணமாக உயிரிழந்த சுகாதாரத் துறையினர், ஊடகவியலாளர்கள், சமூக சேவையாளர்கள், பொதுமக்களின் ஆத்ம சாந்திக்கான விசேட ஆத்ம சாந்தி பிரார்த்தனையும், கோவிட் பாதிப்பிலிருந்து நாடும், உலகமும் பாதுகாக்கப்படவும் விசேட வழிபாடு இன்று காலை 10 மணிக்கு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தில் இடம்பெற்ற வழிபாட்டைத் தொடர்ந்து புனித திரேசா ஆலயத்திலும் ஊடகவியலாளர்கள் விசேட வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்து, குறித்த வேலைத்திட்டத்தின் முதல் நாளான இன்றையதினம் கிளிநொச்சி கல்வி, கலாச்சார அபிவிருத்தி அமையத்துடன் இணைந்து சுகாதார பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி சுகாதார சேவைகள் பணிமனையில் கர்ப்பவதிகளிற்கான மாதாந்த சிகிச்சைக்கு வருகை தந்திருந்தவர்களிற்கு முக கவசங்கள், தொற்று நீக்கி திரவங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து சதொச விற்பனை நிலையம், மீன், மரக்கறி விற்பனை நிலையங்களில் கூடியிருந்த மக்கள், ஊழியர்கள், வர்த்தகர்களிற்கும் முக கவசங்கள், தொற்று நீக்கி திரவங்கள் வழங்கி வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை கூட்டமாக நிற்றலைத் தவிர்க்கவும், சமூக இடைவெளிகளைப் பின்பற்றி கோவிட் தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருந்து பாதுகாப்பாகச் செயற்படுமாறு அறிவுறுத்தல்களையும், ஆலோசனைகளையும் மக்களுக்கு வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.










ஒரு நாள் கூத்து காட்டும் போட்டியாளர்.. இதுக்கு மேல தாங்கமாட்டாரு- திவாகரனை ஓரங்கட்டிய பிரபலம் Manithan
