இலங்கையில் கோவிட் மரணங்களின் எண்ணிக்கை 647ஆக உயர்வு
இலங்கையில் கோவிட் மரணங்களின் எண்ணிக்கை 647ஆக உயர்ந்துள்ளது. கோவிட் தொற்றினால் மேலும் மூவர் மரணமானதாக இன்று இரவு அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்தே மரண எண்ணிக்கை 647ஆக உயர்ந்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
கம்பளையைச் சேர்ந்த 70 வயதான ஒருவர், கந்தானையைச் சேர்ந்த 92 வயதானவர் மற்றும் அவிசாவளையைச் சேர்ந்த 70 வயதான ஒருவர் ஆகியோர் மரணமான மூவருமாவர் என்றும் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இன்று மாத்திரம் 997 பேருக்குக் கோவிட் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என கோவிட் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இதையடுத்து நாட்டில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 2 ஆயிரத்து 376 ஆக அதிகரித்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்த தனது மகனுக்காக இப்படியெல்லாம் செய்துள்ளாரா.. Cineulagam

இஸ்ரேல் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும், அமெரிக்காவால் தப்பியது: ஈரானின் உயர் தலைவரின் பதிவு News Lankasri
